திசைமுகப்படுத்தல் நிகழ்வு

2021 ம் ஆண்டிற்கான முன்பள்ளிக் கல்வி டிப்ளோமாக் கற்கை நெறியின் திசைமுகப்படுத்தல் நிகழ்வானது கடந்த 27.02.2021, 28.02.2021 ஆகிய தினங்களில் வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு, மற்றும் மடு ஆகிய வலயங்களில் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் வடமாகாண முன்பள்ளிக் கல்வி அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா, வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் , நிலைய இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்… மேற்படி கற்கை நெறியை வவுனியா தெற்கு வலயத்தில் 44 ஆசிரியர்களும், வவுனியா வடக்கு வலயத்தில் 36 […]

முன்பள்ளிப் பிள்ளைகளிற்கான செயல் நூல்கள்📖

முன்பள்ளிப் பிள்ளைகளிற்கான செயல் நூல்கள்📖1. எழுதிப் பழகுவோம்2. தமிழ் செயல் நூல்3.ஆரம்ப கணிதம்4. நிறந்தீட்டி மகிழ்வோம்5. சித்திர ஆக்கங்கள்தேவையானோர் தொடர்பு கொள்ளவும்…. 📞

முன் பிள்ளைப்பராய விருத்திக்காக ஒன்றிணைவோம்

எமது நிறுவனம் கல்வி அமைச்சின் அனுமதியுடன் சொலிடார் நிறுவனத்துடன் இணைந்து “முன் பிள்ளைப்பராய விருத்திக்காக ஒன்றிணைவோம்”என்ற செயற்றிட்டத்தின் மூலம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அவர்களின் தகைமை சார்ந்ததும், சமூகம் சார்ந்ததுமான திறன்களை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டு வருகிறது.. இச்செயற்றிட்டத்தின் ஊடாக வெள்ளம், கொவிட் 19 போன்றவற்றால் பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உணவுப்பொதியொன்றை வழங்குவதற்கு எமக்கு நிதிவழங்கும் நிறுவனம் தீர்மானித்திருந்ததுடன் அதற்காக ஏழு வலயங்களில் இருந்து ஆசிரியர் விபரங்களை கல்வி அமைச்சின் ஊடாகப் பெற்றிருந்தோம். அதற்கமைய குறித்த உணவுப்பொதிகளுக்குரிய ரூ.2000 பெறுமதியான கூப்பன்களை கையளிக்கும் நிகழ்வு […]

அன்பு உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்