Events
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான  அடிப்படை ஆங்கிலம் வகுப்புக்களுக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை ஆங்கிலம் வகுப்புக்களுக்கான சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு

ஆறுதல் நிறுவனத்தின் பிரதான பயனாளிகளும் பங்குபற்றுனர்களுமான முன்பள்ளிச் சமூகத்தினரின் வலுவூட்டல் செயற்பாடுகளில் பிறிதோர் பகுதியாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அடிப்படை ஆங்கில வகுப்புக்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவ் ஆங்கில வகுப்பானது சொலிடார் நிறுவனத்தின் அனுசரணையுடனும் கல்வி அமைச்சின் அனுமதியுடனும் நாடத்தப்பட்டன.குறித்த ஆங்கில வகுப்புக்களில் பங்குபற்றிய ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 27.03.2021 சனிக்கிழமை காலை 11 மணிக்கு வவுனியா வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பிள்ளைப்பராய அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் செல்வி. ஜெயா தம்பையா அவர்கள் கலந்துகொண்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார். மேலும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சொலிடார் நிறுவனத்தின் இலங்கைக்கான இயக்குனர் ஜனாப் அபாஸ் ஹித்தாய்துல்லா அவர்களும் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். அத்தோடு முன்பள்ளிக் கல்விக்கான உதவிக்கல்விப் பணிப்பாளர்களான திரு பரம்சோதி , திரு. இராஜேஸ்வரன் ஆகியோரும், வவுனியா கற்கை நிலைய ஆசிரியர் திரு. சோமஸ்கந்தராஜா அவர்களும் பங்குபற்றியிருந்தனர். நிகழ்வில் ஆசிரியர்களின் கலைநிகழ்வுகளும் ஆங்கில மொழி ஆற்றுகைகளும் இடம்பெற்றன.