Blossoms முன்பள்ளி மழலைகளின் கலைவிழா நிகழ்வுகள்..

கடந்த 18-01-2020 அன்று கோண்டாவில் இராமகிருஸ்ணா மகாவித்தியாலயத்தில் அரியாலை மற்றும் கோண்டாவில் Blossoms முன்பள்ளி சிறார்களின் மழலைகள் கலைவிழா இடம்பெற்றது.

இவ்விழாவின் தலைமை விருந்தினராக ஆறுதல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சுந்தரம் டிவகலாலா மற்றும் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளைப்பருவ உதவிப் பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

விருந்தினர் வரவேற்புரை மற்றும் மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வானது சிறார்களின் பாடல் நடனங்களுடன் இனிதே நிறைவு பெற்றது.