பரீட்சைகள் நிறைவடைந்துள்ளன

ஆறுதல் நிறுவனத்தின் 2018/2019 கல்வியாண்டின் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமாக் கற்கை நெறியின் இரண்டாம் பருவப் பரீட்சைகள் இன்று நிறைவடைந்துள்ளன. இப் பரீட்சை முடிவுகள் நவம்பர் மாத முற்பகுதியில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

2018/2019 கல்வியாண்டின் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமாக் கற்கை நெறியின் இரண்டாம் பருவப் பரீட்சைகள்

இக் கல்வியாண்டின் இரண்டாம் பருவப் பரீட்சைகள் கடந்த 5,6 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் 1 , யாழ்ப்பாணம் 2, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, கிளிநொச்சி, முல்லைத்தீவு ,வவுனியா தெற்கு ஆகிய நிலையங்களில் ஆரம்பித்தன. அடுத்த கட்டப் பரீட்சைகள் எதிர்வரும் 12,13 ஆகிய தினங்களில் நடைபெறும்.

Call for requirements

Looking for experienced individuals for Project Proposal writing and Report writing, and to train our staff on the same. Proven track record is expected to be submitted along with the application.     

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எமது நிறுவனத்திற்கு செயற்றிட்ட முன்மொழிவு எழுதுதல் மற்றும் அறிக்கை எழுதலில் மிகுந்த அனுபவம் உள்ளவர்கள் தேவை. எமது பணியாளர்களிற்கு அவை குறித்த பயிற்சி வழங்கவும் வேண்டும். தகுதியானவர்கள் அனுபவச் சான்றுகளுடன் விண்ணப்பிக்கவும்.

இரண்டாம் தொகுதி நட்புதவியாளர் பயிற்சி- வலிகாமம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் பயிற்சி ஆறுதல் நிறுவனத்தினால் இரண்டாம் தொகுதியினருக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆறுதல் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பாக தனது வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான டிப்ளோமா பயிற்சி மற்றும் மாதிரி முன்பள்ளிகளை நடாத்துதல் போன்ற வேலைத்திட்டங்களையும் செய்து வருகின்றது. கொவிட்-19 சர்வதேச பரவல் காரணமாக இலங்கையிலுள்ள முன்பள்ளிகளிலும் அதன் தாக்கம் இல்லாமல் இல்லை. முக்கியமாக முன்பள்ளி பிள்ளைகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களும் இதன் பாதிப்பை எதிர்நோக்குகின்றார்கள். பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிப்பதைத் தொடர்ந்து […]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் பயிற்சி – யாழ்ப்பாண வலயம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் பயிற்சி ஆறுதல் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆறுதல் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பாக தனது வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான டிப்ளோமா பயிற்சி மற்றும் மாதிரி முன்பள்ளிகளை நடாத்துதல் போன்ற வேலைத்திட்டங்களையும் செய்து வருகின்றது. கொவிட்-19 சர்வதேச பரவல் காரணமாக இலங்கையிலுள்ள முன்பள்ளிகளிலும் அதன் தாக்கம் இல்லாமல் இல்லை. முக்கியமாக முன்பள்ளி பிள்ளைகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களும் இதன் பாதிப்பை எதிர்நோக்குகின்றார்கள். பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிப்பதைத் தொடர்ந்து முன்பள்ளிகளும் ஆரம்பிக்கப்படல் […]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நட்புதவியாளர் – உளவளப் பயிற்சி வழங்குவதற்கான கலந்துரையாடல்

கோரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னர், முன்பள்ளிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த இடர் காலத்தின் சமூக உளவள சிக்கல்களை எதிர்கொள்ளவும், பிள்ளைகளுடன் நேயத்தோடும் அக்கறையோடும் அவர்களின் உடல் உள பழக்கங்களை முகாமை செய்யவும் முன்பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பொருட்டு அவர்களுக்கு கட்டம் கட்டமாக  நட்புதவியாளர் – உளவளப் பயிற்சி வழங்குவதற்கான கலந்துரையாடல் ஆறுதல் நிறுவனத்தில் 20.06.2020 அன்று இடம்பெற்றது. ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. சுந்தரம் டிவகலாலா தலைமையில் , துறைசார் உளவள வளவாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இக்கலந்துரையாடலில், ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்சி […]

முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவமும் தற்போதைய சூழ்நிலையில் எதிர்கொள்ளும் சவால்களும்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்பள்ளிக் கல்வியினை மையப்படுத்தி பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுபவரும், ஆறுதல் நிறுவன பணிப்பாளரும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்விச் செயலாளருமான திரு. சுந்தரம் டிவகலாலா பங்கு கொள்ளும் முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவமும் தற்போதைய சூழ்நிலையில் எதிர்கொள்ளும் சவால்களும் என்ற நிகழ்வில் குறித்த விடயம் தொடர்பான உங்கள் வினாக்களுக்கு விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 20 ஜூன் 2020 (சனிக்கிழமை) மு.ப.10 மணி – 11மணி வரை  நிகழ்வு இடம்பெறும் பதிவுகளுக்கு கீழே உள்ள தொடுப்பை (link) அழுத்தவும்: https://forms.gle/Gu1tfw7apA6U23Wi9

பரீட்சைப் பெறுபேறு வெளியாகும் காலத்தில் சிறுவர்களின் உளநலம்

ந.றஞ்சுதமலர் – உளவளத்துணையாளர் ஒவ்வொரு பொதுப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை வாழ்த்துவதும், பாராட்டு வெளியீடுகளையும் அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் குறிப்பிட்ட காலம் வரை காணலாம். அதே வேளையில் பல மாணவர்களின் விபரீத முடிவுகளையும் குறிப்பாக தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் போன்ற செய்திகளையும் அறியக்கூடியதாக இருக்கின்றது. எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கப்பெறாமையினால்தான் குறிப்பிட்ட மாணவன் அல்லது மாணவி இவ்வாறான செயல்களைச் செய்தார்கள் எனப் பொதுவாகக் காரணம் சொல்லப்படுகிறது. இந்நிலையானது அவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் அவர் சார்ந்தோரையும் ஏனைய […]

கொரோனா அனர்த்த காலத்தில் ஆறுதல் நிறுவனத்தின் உள சமூகப் பணி

கொரோனா ( (Covid – 19) பாதிப்பால் உலகம் முழுவதுமே பல்வேறு விதமான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உளசமூகப் பிரச்சினைகளும் மிக முக்கியமான தாக்கமாக உணரப்படுகிறது. அந்த வகையில் இலங்கையும் இவ்வாறான பாதிப்புக்களுக்கு விதிவிலக்கல்ல. ஆறுதல் நிறுவனம் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி மற்றும் உளசமூகப் பணியில் ஈடுபட்டு வருகின்றது அனைவரும் அறிந்த விடயமே. முக்கியமாக போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் உளசமூகப் பணியை மேற்கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் […]