ஆய்வுக்கட்டுரை பிரசுரிப்பு

ஆறுதல் நிறுவனத்தின் மகுட வாசகமாகிய “வடலிகள் வானுயரும்” என்பதனை உளமாற ஏற்றுக் கொண்ட திரு மணிவண்ணன் அவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரையினை ஆறுதல் இணையப் பக்கத்தில் பிரசுரிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்… அன்பர் மணிவண்ணனிற்கு எங்கள் வடலிகள் சார்பில் மிக்க நன்றி. இத்தகைய ஆய்வுக்கட்டுரைகளை அன்பர்கள் யாரும் எழுதி இருந்தால் அவற்றின் தரம் கண்டு எங்கள் இணையப் பக்கத்தில் பிரசுரிப்பதற்கு விரும்புகின்றோம்

மரம் வளர்ப்போம்

வீட்டுக்கு வீடு மரம் வளர்த்து வீதி அனைத்தும் பசுமை செய்வோம். பூமியை நாம் குளிர்வித்து பூவுலகை நாம் காத்திடுவோம்.

சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கான வளவாளர் பயிற்சிப்பட்டறை

சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கான வளவாளர் பயிற்சிப்பட்டறை

தேசிய மொழிகள் மற்றும் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டமானது கனேடிய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் , தேசிய மொழி நிதியத்தினால்(NLF) முன்னெடுக்கப்படுகின்றது. இச்செயற்றிட்டம் தனுடைய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாக சமூகம் மொழி உரிமைகள் குறித்து விழிப்புணர்வைப் பெறுவதோடு, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி இரண்டாம் மொழியைக் கற்கவும் சமூக நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை முன்னேற்றுவதுமாகும். இச்செயற்றிட்டமானது இரண்டு வருட காலப்பகுதியைக்கொண்டது. அத்தோடு  சமூக மட்ட அமைப்புக்களையும், முன்பள்ளிஆசிரியர்களையும், இளைஞர் யுவதிகளையும் பிரதான மாற்று முகவர்களாக கொண்டு இச்செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்சிப்பட்டறை நாள் 01 குறித்த வளவாளர் […]

மொழி உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் பற்றிய வளவாளர் பயிற்சிகள்

ஆறுதல் நிறுவனம் முன்னெடுக்கும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டத்தின் ‘சமூக மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கான’ மொழி உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் பற்றிய வளவாளர் பயிற்சிகள் கடந்த 24 .04.2021 ஆம் திகதி முதல் 27.04.2021 வரையும் வவுனியா தெற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றன.இவ் வளவாளர் பயிற்சி நிகழ்வில் வவுனியா தெற்கு , செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் 20 பேர் பயிலுனர்களாகக் கலந்து கொண்டனர்.

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பும், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்தலும்

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பும், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்தலும்

கல்வி மறுசீரமைப்புக்கான மக்களின் கருத்தக்களைக் கேட்டறிவதற்காக இணைய தளம் 26.03.2021 அன்று அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது, (https://egenuma.moe.gov.lk) இவ் இணையத் தளத்திற்கு அடுத்து வரும் மூன்று மாதங்களிற்குள் முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்புக்கள் குறித்து தனி நபர்களோ, அமைப்புகள் சார்பாகவோ கருத்துக்களை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டின் அறிவு அடிப்படையில் பொருளாதாரத்துக்கான மனித மூலதனம் உருவாக்கப்பட வேண்டுமென கல்வி மறுசீரமைப்புப் பரிந்துரைகள் எடுத்து இயம்புகின்றன. மனிதனை உச்ச அளவிற்கு விருத்தி செய்து கொடுக்கும் ஊடகமாகக் கல்வி உள்ளது, இதன்படி எமது ஆறுதல் நிறுவனம் சமூக ஆர்வலர்களையும் […]