News
செயற்றிட்ட அறிமுக நிகழ்வு

செயற்றிட்ட அறிமுக நிகழ்வு

”Together for Early Childhood in Sri Lanka” என்னும் செயற்றிட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் கீழ் வடமாகாணத்திற்கான அறிமுக நிகழ்வானது 16.03.2019 அன்று அரியாலையில் அமைந்துள்ள ஆறுதல் நிறுவனத்தின் உப அலுவலகத்தில் ஆறுதல் நிறுவன பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் வடமாகாண ஆரம்ப பிள்ளை அபிவிருத்திப்பிரிவின்  பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா மற்றும் Solidarite Laique  நிறுவனத்தின் தேசிய  பணிப்பாளர் அப்பாஸ் ஹிதாயத்துல்லா  மற்றும் நிதி/நிர்வாக முகாமையாளர் முஸப்பீர் அனீஸ் போன்றோருடன்   முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர்களும் முன்பள்ளி இணைப்பாளர்களும் கலந்து கொண்டதுடன் ஆறுதல் நிறுவனத்துடன் மன்னாரில் இணைந்து பணியாற்றி இருக்கும் RDF செயலாளர் A.R.A.றசீம் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதன் போது இச் செயற்றிட்டத்தின் ஊடாக எவ்வாறான செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளலாம்  போன்ற கலந்துரையாடல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.